சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மத கட்டமைப்புகளையும் அகற்றத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இது நடைபெறுகிறது. அங்கு சுமார் 40,000 சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டவிரோத கட்டமைப்புகளும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுபவர்களால் வழங்கப்படும் நிலத்திற்கு மாற்றப்படும் அல்லது அதை நிர்வகிக்கும் நபர்களின் உரிமையின் கீழ் இருக்கும் தனியார் நிலத்தில் ஆறு மாதங்களுக்குள் மாற்றப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.