கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை

சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ் வட தமிழக மாநில செயலாளர் ராமராஜசேகர், கணபதி, சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் குரு சுப்ரமணியன், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 60 பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.