ஹிந்து எழுச்சி மாநாடு

புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா துவக்க மாவட்ட மாநாடு உலக ஹிந்துக்கள் எழுச்சி மாநாடாக தென்காசியில் நடந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்துாரில் வரும் 2022 மார்ச் 9ல் ஹிந்துக்கள் எழுச்சி, ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தப்பட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதில் பாரத அளவில் உள்ள ஆன்மிக தலைவர்கள் பங்கேற்பார்கள், பாரதத்தில் எண்ணிக்கையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்கள் என்று சொல்வதற்கே ஹிந்துக்கள் கூச்சப்படுகின்றனர். இந்த சூழலை மாற்றி அமைத்து ஹிந்துக்கள் என தலைநிமிர்ந்து சொல்ல வேண்டும். அதன் மூலம் பாரத தேசத்தின் அடையாளம் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஹிந்துக்கள் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமுக நல்லிணக்கம், சமத்துவம் ஏற்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு 10 ரூபாய் குறைத்துள்ளது. மாநில அரசும் அதே போல் 10 ரூபாய் குறைக்க வேண்டும் என கூறினார்.