ஹிந்து ஒற்றுமைப் பேரணி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை நாடெங்கிலும் உள்ள ஹிந்துக்கள் கண்டித்துள்ளனர். இது ஹிந்துக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெரும் பேரணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில கிராமங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவ்வகையில், ராஜஸ்தான் பாலி நகரில் ஹிந்துக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடந்துள்ளது. பேரணியில் மக்கள் ஹனுமான் சாலிஸாவை பாடிக்கொண்டு சென்றனர்.