இந்து முன்னணி போராட்டம்

ஈரோடு மாவட்டம் டி.என் பாளையத்தில் உள்ள மத்தளக் கொம்பு விநாயகர் தீர்த்தக் குளத்தை சில நாட்களுக்கு முன்பு சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் திட்டமிட்டு சேதப்படுத்தி, அவமதித்த சம்பவம் நடைபெற்றது. அந்த முஸ்லிம் அடிப்படைவாதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டபின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘இந்த விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்து முன்னணி மாபெரும் போராட்டம் நடத்தும்’ என அறிவித்தார்.