அனைவரும் ஹிந்துக்களே

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தேசம் பாரதம். உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் பாரத வம்சாவளியினராகத் தான் இருப்பார்கள். முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன்பு வரை பாரதத்தில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால் அவர்கள் பாரதம் வரலாம். அது, அவர்களின் உரிமை. கோயில் கட்டுவது, கோயிலை சீரமைப்பது எல்லாம் மதவாதமாக திரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. அது ஹிந்துக்களின் உரிமை. ஒரு ஹிந்துவால் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மைவாதியாக இருக்க முடியும். ஹிந்துத்வா ஒரு வாழ்க்கை முறை. இதை தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. பாரதம் இருக்கும் வரை ஹிந்துத்துவாவும் இருக்கும். இங்குள்ள கிறிஸ்தவர், முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துவாகத் தான் இருந்தனர்.