நேரடியாக பார்வையிடும் ஆளுநர்

திருணமுல் கட்சியை சேர்ந்த வன்முறையாளர்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறையில், 20 க்கும் மேற்பட்ட பா.ஜ.க உறுப்பினர்கள், ஆர்.எஸ்எ.ஸ் தொண்டர்கள் என பல ஹிந்துக்கள் உயிர் இழந்துள்ளனர். வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்று பார்வையிட அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அளும் மமதா அரசு அதற்கான சாதகமான பதிலை அளிக்கவில்லை, உரிய பாதுகாப்பு ஏற்படுகளும் செய்யவில்லை. இதனால், தற்போது மமதா அரசு சாதகமான பதிலை அளிக்காவிட்டாலும், வரும் நாட்களில் தான் வன்முறை பாதித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.