தமிழக அரசு மெத்தனம்

மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள வீடியோவில் ‘முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு, கொரோனா முதல் அலையில் மிகத் தீவிரமாக இயங்கி மக்களை காப்பாற்றியது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிந்து, கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கி கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஊரடங்கின்போது மக்களுக்கு காய்கறி பழவகைகளை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியது. ஆனால் தற்போது தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, இத்தனை உயிர் பலிகளுக்கும் பிறகும் மெத்தனமாக செயல்படுகிறது. கடந்தமுறை நாங்கள் ஊரடங்கு அறிவித்தபோது, மக்கள் இதன் பொருளாதாரச் சுமையை எப்படி தங்குவார்கள் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.