இலவச உணவு தானிய திட்டம்

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்த நிலையில், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் ரேஷன் கடைகளில் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர், இம்மாத துவக்கத்தில், பிரதமர் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தீபாவளிவரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, வரும் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால், 81 கோடியே 35 லட்சம் பேர் பலனடைவர். இதன் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. இதனால், அரசுக்கு 67 ஆயிரத்து 266 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.