நான்கு பி.எப்.ஐ பயங்கரவாதிகள் கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஏப்ரல் 16ம் தேதி, ஆர்.எஸ்எ.ஸ் ஸ்வயம்சேவகர் ஸ்ரீனிவாசன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைத் தொடர்பாக மேலும் நான்கு பி.எப்.ஐ பயங்கரவாதிகளை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நால்வரும் அப்துல் ரஹ்மான், ஃபிரோஸ், பசில் மற்றும் ரிஷில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அப்துல் ரஹ்மான் மற்றும் ஃபிரோஸ் ஆகியோர் இந்த கொலையில் நேரடியாக தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  இந்த நால்வரும் மற்ற ஆறு பேருடன் சேர்ந்து கொலையை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலை நடந்த இடத்தைச் சுற்றியுள்ளவர்களைக் கண்காணித்து கொலையாளிகளை பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி ஆதாரம்: https://organiser.org/2022/04/27/78085/bharat/rss-swayamsevak-murder-case-another-4-pfi-terrorists-arrested-total-13-held/