வனப்பகுதி ஆக்கிரமிப்பு நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி, நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு எதிரான நடவடிக்கைக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீலகிரி மாவட்ட ஆட்சியர், வனத்துரை அதிகாரி உள்ளிட்டோர், இது குறித்து ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க வேண்டும். அவர்கள் வனத்தில் இருந்து ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில், ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.