தேசமெங்கும் போரட்டம்

கிறிஸ்தவ பல்ளி நிர்வாகத்தின் மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யவிற்கு நீதி கேட்டு போராடிய ஏ.பி.வி.பி மாணவர்களை அராஜகமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு. இதனையடுத்து லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தி.மு.க அரசை கண்டித்தும், உடனடியாக ஏ.பி.வி.பி மாணவர்களை விடுவிக்கக்கோரியும் தேசமெங்கும் ஏ.பி.வி.பி மாணவர்கள் போராடி வருகின்றனர். மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மால்வா என தேசத்தின் பல பகுதிகளிலும் இப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.