காவலரை தாக்கிய போராட்டக்காரர்கள்

டெல்லியில் உள்ள திக்ரி எல்லையில் விவசாயப் போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர். அந்த இடத்தில், விவசாய வன்முறைப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட விவசாயிகளில், காணாமல் போணவர்கள் குறித்த சுவரொட்டிகளை காவலர் ஜிதேந்திர ராணா ஒட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போராட்டக்காரர்கள் சிலர், அவரை மூர்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் காவல்துறையினர்.