தேர்வு கட்டணம் விலக்கு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகள் வழங்கும்போது இந்த விபரங்களையும் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.