இழிவுபடுத்துவோருக்கு ஓட்டு கிடையாது

இந்துமுன்னணியின் சார்பில் நடைபெறும் ஹிந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ‘ஹிந்துக்களின் கோயில் நிலங்களில் பிற மதத்தினர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். திண்டுக்கல்லில் எம்.எல்.ஏ காந்திராஜன் அழகான பெண்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என பேசியது கண்டனத்திற்குரியது. தி.மு.கவின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி போன்றோரும் பெண்களை வர்ணித்து பேசியுள்ளனர். வி.சி.கவின் திருமாவளவன், எங்கள் இளைஞர்களுக்கு சக்தி, திறமையுள்ளதால் கலப்பு திருமணம் செய்கின்றனர் என பேசுகிறார். எனவே, இதுபோன்று நம்மை இழிவுப்படுத்தும் கட்சிகளுக்கு ஹிந்துக்கள் ஓட்டு போடக் கூடாது’ என்றார்.