தயாநிதி மாறனின் தமிழ் பற்று

சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க எம்பி தயாநிதி மாறன், நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்பொழுது மொழி பிரச்சனையை அமித்ஷா கையிலெடுத்துள்ளார். தமிழ் மொழி மீது கை வைத்தால் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால், தயாநிதி என்ற இவரது பெயர் உட்பட இவரது குடும்பத்தினர் யாரின் பெயரும் தமிழில் கிடையாது. இவர்கள் நடத்தும் 33 தொலைக்காட்சி நிறுவனங்களின் பெயர்களை இவர்கள் என்ன தமிழிலா வைத்தார்கள்? தமிழ் மீது அவ்வளவு பற்றிருந்தால், முதலில் தங்கள் தொலைக்காட்சி சேனல்களின் பெயரையும் தங்களின் பெயர்களையும் தூயத் தமிழில் மாற்றி வைத்து அதனை தயாநிதி மாறன் குடும்பம் நிரூபித்து ஒரு முன்மாதிரியாக திகழலாமே? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.