பண்பாட்டு பயிற்சி வகுப்புகள்

குழந்தைகள் மனதில் பண்புப் பதிவுகள் வளர்ப்பது எப்படி என்ற பயிற்சி வகுப்பு தமிழ்நாடு சேவாபாரதி வரும் 14-3-2021 – ஞாயிறு அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள சேவாபாரதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பண்பாட்டு பயிற்சி வகுப்பை எப்படி நடத்துவது, வழிமுறைகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும். அதற்கான புத்தகங்களும் வழங்கப்படும். இதில் கற்றுக் கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு எட்டு வயது முதல் 15 வயதிற்குக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளிடம் ஒழுக்கம், தேசபக்தி, தெய்வபக்தி ஆகியவற்றை உருவாக்க 10 நாட்கள் பண்பாட்டு பயிற்சி வகுப்பை நடத்தலாம். எனவே, இந்த வகுப்பை நடத்த விரும்பும், பணி நிறைவு பெற்றவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியைகள், வீட்டுத் தலைவிகள், கல்லூரி மாணவிகள், மாணவர்கள் போன்ற யார் வேண்டுமானலும் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கும் பதிவு செய்யவும் 63792 67872, 98405 93181 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.