அரசியல்வாதிகளை கொல்ல சதி

நிழல் உலக பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி, பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை சமீபத்தில் வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக, தாவூத்தின் சகோதரர், சகோதரி வீடுகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாவூத் இப்ராஹிம், பாரதத்தின் முக்கிய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளது, பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்த திட்டமிட்டது, அதற்காக இளைஞர்களை கொண்ட சிறப்பு பிரிவை உருவாக்கியது, ரகசியமாக பணப் பட்டுவாடா செய்தது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.