ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை தகர்க்க சதி

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டதாக வந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் டிரோன்களை பறக்கவிடவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஒருமாதம் முன்பாக நாக்பூருக்கு வந்த காஷ்மீர் பயங்கரவாதிகள் சிலர் அங்கு ஒருசில நாட்கள் தங்கியிருந்து வேவு பார்த்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் தவிர, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குண்டு வெடிப்பு நடத்த அவர்கள் திட்டமிட்டதாக உளவுத்துறை தெரிவித்து உள்ளது என என காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.