ராணுவ தளபதியை கொல்ல சதித் திட்டம்

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுப்பயணத்தின் போது கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. அதனை மோப்பம் பிடித்த பாகிஸ்தான் உளவு அமைப்புகள், அந்த திட்டத்தை முறியடித்து திட்டம் தீட்டிய அனைவரையும் கைது செய்ய பாதுகாப்பு படைகளுக்கு உதவியுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 4 மேஜர் ஜெனரல், 2 ப்ரிகேடியர், 3 கர்னல்கள், 3 லெஃப்டினன்ட் கர்னல்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பதவிகளை வகிக்கும் உயர் அதிகாரிகள் 14 பேர், 22 எஸ்.எஸ்.ஜி சிறப்புப் படை வீரர்கள் மற்றும் 30 இதர ராணுவ வீரர்கள் ஆகியோர் என மொத்தமாக சுமார் 66 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இத்தகவலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமுக ஆர்வலர் டாக்டர் அம்ஜத் அயூப் மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.