காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விலகல்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் நுழைய உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் தீபிகா புஷ்கர்நாத் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் சே லால் சிங்கின் முன்மொழிவை ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் பிரிவினைக்கு எதிரானது என்பதால் இந்த கருத்தின் அடிப்படையில் என்னால் பிரிவினைவாதிகளுடன் இணைந்து யாத்திரையில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.