ஓணம் வாழ்த்து

ஓணம் பண்டிகையஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் பரவியுள்ள கேரள மக்களுக்கும் மலையாளிகளுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளி விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஓணம் நம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்” என வழ்த்தியுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “புனிதமான ஓணம் பண்டிகை நாளன்று பாரதத்தில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் குறிப்பாக கேரளாவின் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி,  பா.ஜ.க தலைவர்கள், ஹிந்து அமைப்பினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.