பா.ஜ.கவில் இணைந்த கம்யூனிஸ்ட்டுகள்

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்கு வெற்றிபெற்று ஆட்சியமைக்க பா.ஜ.க முயன்று வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம், கோவளத்தில் உள்ள சி.பி.ஐ.எம் கட்சியின் விழிஞ்சம் பஞ்சாயத்து முன்னாள் தலைவரான முக்கோலா பிரபாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு கிளைக் குழுவினர் மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி,  முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர். மேலும், முல்லூர் சி.பி.ஐ.எம் கிளை அலுவலகம் விரைவில் பா.ஜ.க அலுவலகமாக மாற்றப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “கேரளா விரைவில் ஒரு திரிபுராவாக மாறும். கேரளாவில் பா.ஜ.கவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது” என பா.ஜ.க கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.