அறநிலையத்துறை குறை கேட்பு மையம்

ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு, பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார். ‘இந்த சேவையை, பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் 044- 2833 9999 என்ற எண்ணில் தொடர்புகொண்டு திருக்கோயில் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம். குறை குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். கோரிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதல் கோரிக்கைதாரர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும். கோரிக்கை நடவடிக்கை விவரங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.