டி.கே.சிவகுமார் மீது வழக்குப்பதிவு

கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் கடந்த 28ம் தேதி மண்டியா மாவட்டத்தில் உள்ள பெவினஹள்ளியில் ‘மக்களின் குரல்’ பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர், 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் மீது வீசியெறிந்தார். பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில், இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மண்டியா மாவட்டத்தின் ஆட்சியர் கோபால கிருஷ்ணா, டி.கே. சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மண்டியா ஊரக காவல்துறையினர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.