எம்.பி மீது வழக்குப் பதிவு

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க், கடந்த ஆகஸ்ட் 16 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை பாராட்டியுள்ளார். தன் சொந்த நாட்டின் மீதான மோசமான அவர்களின் தாக்குதலை, பாரதத்தின் சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிட்டுள்ளார். நமது நாடு ஆங்கிலேய ஆட்சியில் இருந்தபோது சுதந்திரத்திற்காக போராடியது. அதேபோல,தற்போது தலிபான்கள் தங்கள் நாட்டை விடுவித்து அதை வழிநடத்த விரும்புகிறார்கள். என கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மீது தேசத்துரோகம், குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்தல், மத உணர்வுகளை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரபிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.