களவாடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள்கோயில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்த காளிங்கனார்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பழங்கால சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு சில மர்ம நபர்களால் கொள்ளையடித்துவிட்டு அதற்கு பதில் போலி சிலைகளை வைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது புதுச்சேரி இந்தோ பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் பெறப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டு தேடுதல் நடத்தப்பட்டது. நீண்ட தேடலுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ, புளோரிடா ஹில்ஸ் ஏல மையம், டெக்சாஸ் கிம்பெல் கலை அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் கொள்ளை போன இந்த மூன்று சிலைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவில் இருந்து அந்த 3 சிலைகளையும் மீட்டு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.