அரசு வேலைக்கு லஞ்சம்

தி.மு.க நகரச் செயலாளர் சூர்யா என்பவர், அரசு வேலை வாங்கித் தர லஞ்சம் கேட்கும். காணொளி வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இணையதள ஊடகமான தினமலர் வெளியிட்டுள்ள அந்த காணொளியில், ‘வேலை கேட்டு வருவோரிடம் அவர், அதற்கு 5 லட்சம் செலவாகும். முதலில், 3 லட்சம் கொடுக்க வேண்டும், மீதிப் பணத்தை செக்காக கொடுத்துவிடுங்கள். வேலைக்கான உத்தரவு கிடைத்த உடன் அந்த பணத்தை கொடுத்துவிட வேண்டும்’ என டீலிங் பேசுகிறார். மேலும், ‘நாங்கள் அந்த பணத்தை அங்கு கட்டுகிறோம். எந்த அமைச்சரும் இலவசமாக செய்துத்தர மாட்டார்கள். உங்கள் ஒருவருக்காக நான் போகவில்லை. 10 பேருக்காக போகிறேன்’ என பேசியுள்ளார். தேர்தல் வாக்குறுதியில் 5.50 லட்ச அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்போவதாக தி.மு.க அரசு கூறியது நினைவிருக்கலாம். ஒரு பணிநியமனத்திற்கு 5 லட்சம் ரூபாய் என்றால், 5.50 பணிநியமனங்களுக்கு!?