கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உத்தரப் பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் நகரில் உள்ள புகழ்பெற்ற கோரக்நாதர் கோயிலை வெடி வைத்து தகர்க்கப் போவதாக சமூக ஊடகங்கல் மூலம் மிரட்டல் விடுத்தார். மேலும், ஹிந்துமத கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பினார் ஒரு முஸ்லிம் நபர். உ.பி’யின் சைபர் செல் மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டுக் குழு இந்த விஷயத்தை விசாரித்து முபாரக் அலி  என்ற நபரை கைது செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘முபாரக் அலி, கோட்டா முகுந்த்பூர் கிராமத்தில் வசிக்கும் தனது நண்பர் பசலத் அலியிடம் ரூ. 40,000 கடன் வாங்கினார். பசலத் அலி பணத்தைத் திருப்பித் தருமாறு முபாரக் அலியிடம் கேட்கத் தொடங்கினார். முபாரக் அலி பணத்தை திருப்பித் தர விரும்பவில்லை, எனவே அவர் பசலத் அலியை சிக்க வைக்க சதி செய்தார். பசாலத் அலி பெயரில் சிம் கார்டு வாங்கி அதனை வைத்து போலியான முகநூல் ஐடி தயாரித்து அதில் இருந்து இந்த மிரட்டலை விடுத்துள்ளார்’ என தெரிவித்தனர். மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.