பா.ஜ.க தலைவர்கள் கைது

கடப்பா மாவட்டத்தில் புரோட்டாத்தூர் நகரில், ஏராளமான ஹிந்துக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் சிலையை நிறுவ அப்பகுதி முஸ்லிம்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் ராச்சமல்லு சிவா பிரசாத் ரெட்டிக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனை ஏற்று அவர் அங்கு திப்புவின் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தார். இதனை அப்பகுதி பா.ஜ.கவினர், ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் எதிர்த்தனர். இதனால், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் விஷ்ணுவர்தன் ரெட்டி மற்றும் பிற பா.ஜ.கத் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.