பாரதம் மறுப்பு

கோத்தபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு பாரதம் உதவுவதாக வெளியான ஆதாரமற்ற மற்றும் ஊக ஊடக அறிக்கைகளை பாரத தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்கள் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் போது பாரதம் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.