குற்றவாளிகளுக்கு ஜாமீன்

கடந்த 2020 ஏப்ரல் 16 அன்று, மகாராஷ்டிர மாநிலம் பால்கரில், ஜூனா அகாராவை சேர்ந்த சாதுக்களான சிக்னே மகாராஜ் கல்பவ்ருக்ஷகிரி மற்றும் சுஷில்கிரி மகாராஜ் மற்றும் அவர்களது வாகன ஓட்டுநர் ஆகியோரை ஒரு கும்பல் கற்கள், கட்டைகள், கோடரிகளால் கொடூரமாக தாக்கிக் கொன்றனர். அந்த அப்பாவி சாதுக்களை அந்த பயங்கரவாத கும்பலிடம் இருந்து காப்பதற்கு பதிலாக, வேடிக்கை பார்த்தனர் மகாராஷ்டிரா காவல்துறையினர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு தானே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 14 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற 18 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.