ஹிந்து அமைப்பாளர் மீது தாக்குதல்

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத், விஜய் நகரில் ஹிந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பின் மாவட்டத் தலைவர் தீபக் குமார் திவாதியா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை ஒரு கடையில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, ஃபஹீம் என்பவன் தலைமையிலான சில முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து அவரை கொடூரமாகத் தாக்கினர். அவரது வாகனம், அலைபேசி உடைக்கப்பட்டது. தீபக் குமார் லவ் ஜிஹாத் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக போரடி வந்தார். இதனால் ஆத்திரமுற்ற அந்த முஸ்லிம்கள் அவரை தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அவர் தாக்கப்பட்ட வீடியோவும் சமூக உடகங்களில் பரவியது. சம்பந்தப்பட்ட முஸ்லிம் வன்முறையாளர்களை கைது செய்ய ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில், ஃபஹீம் உட்பட சம்பந்தப்பட்ட மூவரை காவல்துறை சமீபத்தில் கைது செய்துள்ளது. இந்த வன்முறைக்கு தலைமை தாங்கிய ஃபஹீம் ஒரு ஹிந்து விரோதி என்றும், அவர் மீது ஏற்கனவே எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிந்து ரக்ஷா தளம் குற்றம்சாட்டியுள்ளது.