மதவெறியர்களின் கொலை முயற்சி

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களைத் தாக்கும் வினோத தீவிர இஸ்லாமியவாத மனநிலை தற்போது தேசமெங்கும் பரவி வருகிறது. இனி தங்களையோ அல்லது தங்கள் மதத்தை குறித்தோ, தங்கள் மதமாற்ற நடவடிக்கைகளையோ, சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தோ யாரும் பேசக்கூடாது என்று பொதுமக்களை பயமுறுத்தி அவர்களை எப்போதும் ஒரு அச்சத்திலேயே வைத்திருக்கும் முயற்சியே இது. அவ்வகையில், கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் நுபுர் சர்மா, கன்ஹையா லால் ஆகியோரை ஆதரித்ததற்காக வலதுசாரி உறுப்பினர்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாகல்கோட் மாவட்டத்தில், கன்ஹையா லால் கொலையை கண்டித்து ஹிந்து ஜாகரன் வேதிகே அமைப்பின் மாவட்ட செயலாளர் அருண் கட்டிமணி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள், கட்டிமணி தனது நண்பர்களான லக்ஷ்மன் கட்டிமணி மற்றும் யமனூர் சுங்கின் ஆகியோருடன் கெரூர் நகரில் உள்ள பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மர்மநபர்கள் திடீரென அருணின் முதுகில் சரமாரியாக கத்தியால் குத்தினர். மேலும் இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரது இரண்டு நண்பர்களும் கத்தியால் குத்தப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் வன்முறைச் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2 நாட்களுக்கு அங்கு 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இந்த வழக்கில் இதுவரை 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.