தி.மு.க ஆட்சியில் அராஜகம்

சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி, கோழைத்தனமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னை திருவிக நகர் 75வது வார்டு பாஜக வேட்பாளர் ரேணுகா சகாதேவன் பணிமனையும், திருப்பூர் 44வது வார்டு வேட்பாளர் பாஜக சிவகுமார் பணிமனையும், வேலூர் நகராட்சி 52வது வார்டு வேட்பாளர் கார்த்திகேயன் தேர்தல் பணிமனையும் எரிக்கப்பட்டுள்ளது. திருப்பூண்டியில் பா.ஜ.க நிர்வாகி காருக்கு தீ வைக்கப்பட்டடுள்ளது. இவற்றையெல்லாம் தனிமனிதர்கள் செய்வதற்கு வாய்ப்பில்லை. இந்த தொடர் சம்பவங்கள், இதன் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளதையே அம்பலப்படுத்துகிறது.