அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாரதத்தின் விவசாய சட்டங்களால், விவசாயத்துறை அதிக தனியார் முதலீட்டை  ஈர்க்கும். விவசாயிகள் தங்கள் பொருட்களை தேசத்தில் நேரடியாக எங்கும் விற்கலாம்.  விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரும் இந்த விவசாயத் துறை சட்ட சீர்திருத்தத்திற்கு அமெரிக்கா  ஆதரவளிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் விவசாய போராட்டம் எனும் பெயரில் நடைபெற்ற வன்முறைக்கு, அமெரிக்கா தன் கண்டனத்தையும் பதிவிட்டுள்ளது.