அகில பாரத காரியகாரி மண்டல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத காரியகாரி மண்டலின் வருடாந்திர கூட்டம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் 2022 அக்டோபர் 16 முதல் 19 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து 45 மாநில தலைவர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள், துணை செயலாளர்கள், பிரசாரகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர். மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, அனைத்து துணை பொதுச் செயளாலர்கள், மற்றும் தேசிய அளவிலான பிற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம் அகில பாரதிய பிரதிநிதி சபாவில் உருவாக்கப்பட்ட வருடாந்திர வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். அமைப்பின் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மேலும், நாட்டின் முக்கியமான சமகால முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர். மோகன் பாகவத்தின் விஜயதசமி உரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பிரச்சனைகளை பின்தொடர்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர் தெரிவித்தார்.