இளங்கோவன் மீது நடவடிக்கை?

ஈரோட்டில் சமீபத்தில் நடந்த தி.க கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், இசைமைப்பாளர் இளையராஜாவின் ஜாதி குறித்து விமர்சித்து பேசினார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவியது. இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தி என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், டெல்லியில் உள்ள, தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இளங்கோவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் தர வேண்டும் என்று சென்னை காவல் ஆணையருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையர் அலுவலகம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.