நிரந்தர தீர்வு தேவை

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயில், உலகிலுள்ள சைவ பெருமக்களின் மூலஸ்தானமாக உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் நிறைந்துள்ள நடராஜர் குறித்து, ஆபாச வார்த்தைகளால் ஒருவர் சித்தரித்து ‘வீடியோ’ வெளியிட்டுள்ளார் என்பது, ஆதீன பிரச்னைகளை உருவாக்குகின்றன. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினாலும் தீர்வு ஏற்படுவதில்லை. மத நம்பிக்கையை புண்படுத்தும் இதுபோன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது அவசியம்’ என கூறினார்.