உ.பியில் ஒரு லவ்ஜிஹாத்

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் லவ் ஜிகாத் வழக்கு ஒன்று வெளியாகியுள்ளது. ஜார்சா கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது காதலன் பாபர் அலி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை பாபர் அலியும் அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாபர் அலியிடம் கேட்டபோது, ​​அந்த பெண்ணை முஸ்லிம்மாக மதம் மாற்றுமாறு வற்புறுத்தியுள்ளார் பாபர் அலி. மேலும், இதுகுறித்து புகார் கொடுத்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். எனினும், அந்த பெண், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனினும், 24 மணி நேரமாகியும் காவல்துறையினர் இதில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த புகார் கடிதம் இணையதள ஊடகங்களில் பரவியதையடுத்து, வேறு வழியின்றி காவல்துறையினர் விரைந்து அறிக்கை பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கிரேட்டர் நொய்டா கூடுதல் டி.சி.பி தினேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.