ராமரை இழிவுபடுத்தி பதிவு: தி.மு.க பிரமுகர் வீடு முற்றுகை

உ.பி. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலர் செல்வராஜ் என்பவர், சமூக வலைதளத்தில், ‘அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு; ராமருக்கு பிடித்த மாட்டுக்கறி பிரியாணி ரெடி’ என ராமரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சி நகர பா.ஜ. தலைவர் பரமகுரு தலைமையில், பா.ஜ.வினர் நேற்று, செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு பஜனை பாடல்களை பாடினர். அப்போது, செல்வராஜின் மகனும், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளருமான மணிமாறன் மற்றும் குடும்பத்தினர், எதிர் கோஷமிட்டனர். இருதரப்பும் மாறி கோஷங்களை எழுப்ப, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்தில் இருந்த போலீசார், இரு தரப்பையும் விலக்கினர்.