புதிய கல்வி கொள்கை கே.வி., பள்ளிகளில் அமல்

புதிய கல்வி கொள்கையின் எட்டு வகையான நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், கே.வி., பள்ளிகளில் புதிய அம்சங்கள் அமல்படுத்தப்பட்ட உள்ளன. இதன்படி, தமிழகத்தில் உள்ள கே.வி., பள்ளிகளில், 3 வயது முதலான மாணவர்கள் பள்ளிக்கு வரும் வகையில், 22 இடங்களில், ‘பால்வாடிகா’ என்ற மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளித்து, மாணவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது. அதேபோல், கே.வி., பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்திலும், 25 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும், மாணவர்களின் இடைநிற்றல் குறைக்கும் வகையில், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கே.வி., பள்ளிகள் சென்னை மண்டல உதவி கமிஷனர் -அனில் மோகன் தெரிவித்தார்.