மமதா அரசின் மேலும் ஒரு புதுமையான மோசடி

மேற்கு வங்க மமதா அரசில் வரலாறு காணாத ஊழலும் அடுத்து பா... வினரைப் படுகொலை செய்வதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 2000 ரூபாய் நோட்டு வாபஸிற்கு பின்னால், கணக்கில் காட்ட முடியாத கள்ளப் பணம் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடமே (2,000 ரூபாய் நோட்டுக்கள்) அதிகம் இருக்கிறது.

அண்மையில் ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கததினர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் தருவதாக அம்மாநில அறிவித்தது. அறிவித்தபடி நிவாரணத் தொகையாக ரூபாய் 2 லட்சத்தையும் வழங்கியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 47 பேர் இவ்விஷயத்தில் உயிரிழந்தனர்.

பொதுவாக அரசு நிவாரணத் தொகை காசோலையாகத் தான் வழங்கப்படும். ஆனால் மேற்கு வங்க அரசோ காசோலைக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முழுத் தொகையையும் 2,000 ரூபாய் நோட்டுக்களாக அளித்துள்ளது.

மேற்கு வங்க ஆட்சியாளர்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுக்களை சாதாரண மக்களின் தலையில் கட்டுவதேன்?