பாரதத்தின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டெல்லி, பிரகதி மைதானத்தில் நடைபெற்ற ‘உலக புத்தகக் கண்காட்சி 2023’ல் மத்திய அரசின் கூடுதல் செயலர் ஸ்ரீ சஜ்ஜன் சிங் யாதவ் எழுதிய ‘பாரதத்தின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை கோவ் பாக்ஸ் முதல் வாக்சின் மைத்ரி வரை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். பாரதம் நடத்தும் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் பாரதத்தின் அற்புதமான சாதனைகளை இந்த புத்தகம் விவரிக்கிறது. இதில் பேசிய அமைச்சர், “பாரதத்தின் அறிவியல் சமூகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள நட்சத்திர சுகாதார வல்லுநர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்களின் கூட்டு முயற்சியானது பாரதத்தை சமாளிக்க முடியாத சவால்களை வென்று இதுவரை எந்த நாடும் செய்யாத சாதனையை செய்ய வழிவகுத்தது. உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசிகளை நாம் சரியான நேரத்தில் வழங்குகிறோம். சுகாதார நிபுணர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இதில் உள்ளது. உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக பாரதம் 2.2 பில்லியன் டோஸ்களை நாடு முழுவதும் எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் கொண்டு சேர்த்ததன் விளைவாக 3.4 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மற்ற நாடுகள் தயக்கத்துடன் போராடும் போது ​​பாரதம் ஒரு முன்மாதிரியான தடுப்பூசி சார்பு கோவிட் மேலாண்மை மாதிரியை அமைத்தது.

தொற்றுநோய் நெருக்கடியை மட்டும் விவரிக்காமல், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தடுப்பு மருந்துகள் வரலாற்றையும் விவரிக்கும் விரிவான பாணியில் ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் தடுப்பூசி இயக்கம் சித்தரிக்கப்படுவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணங்கள் பாரதத்தின் பாரம்பரியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடியதாகும். இது உலக சாத்தியக்கூறுகள் மற்றும் தீர்வுகளை எடுத்துக்காட்டுகிறது. பாரதத்தின் கொவிட்19 பாதை, நமது பாரம்பரிய வேர்களில் சார்ந்து உள்ளது. நமது பாரம்பரியம் நமது அறிவையும் அறிவியலையும் பிரதிபலிக்கிறது. அவை காலத்தைத் தாண்டி  நிற்கின்றன. நெருக்கடி காலங்களில் முன்மாதிரியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. நமது கை கூப்பி வணங்கும் பாரம்பரிய வாழ்த்து ‘நமஸ்தே’, தொற்றுநோய் நெருக்கடியின் மூலம் உலகளாவிய வாழ்த்துக்கான வழியாக மாறியது, மக்கள், நமது பாரம்பரியத்தை உற்று நோக்கும் பொழுது பாரதத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும் அதன் அறிவியல் செயல்முறைகளின் அடிப்படையிலான, உலகம் அங்கீகரிக்கும் பாரம்பரியங்களின் ஆழமான களஞ்சியத்தைக் காண்பார்கள். எழுத்தாளர்க நமது மறக்கப்பட்ட பாரதத்தின் பாரம்பரியங்கள் மற்றும் பாரம்பரியத்தின் பொக்கிஷங்களை பற்றிப் பேசும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணங்களை உருவாக்க வேண்டும்” என கூறினார்.