செந்தில் பாலாஜி வழக்கை ரத்து செய்யக்கூடாது

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக தற்போது இருக்கும் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிக்கிறது. மேலும், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்த‌து. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.