கைது செய்யப்பட்ட கம்யூனிச தலைவர்

பிளஸ் டூ மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளரான பிலிக்கோடு எச்சிக்கோவல் தெக்கேவீட்டில் டி.டி பாலச்சந்திரா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, ஓணம் கொண்டாட்டத்தின் போது பள்ளி கூட்ட அரங்கில் பாலச்சந்திரா தனது உடலை பாலியல் நோக்கத்துடன் தொட்டதாக மாணவி தனது புகாரில் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரை பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த புகாரின் பேரில், பாலச்சந்திரா மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.எம் கட்சி, அவரை எச்சிக்கோவல் வடக்கு கிளை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதுடன் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியையும் ரத்து செய்தது. பள்ளி நிர்வாகமும் அவரை பி.டி.ஏ தலைவர் பதவியிலிருந்து நீக்கியது.