அமைதியை குலைக்கும் முயற்சி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. பூஜை செய்வதற்காக விநாயகர் சிலைகளை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், குஜராத்தின் வதோதரா நகரில் பானிகேட் பகுதியில், விநாயகர் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஹிந்துக்கள் மீது மாற்றுமத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுபற்றி வதோதரா இணை ஆணையாளர் சிராக் கோர்டியா கூறுகையில், ‘நிலைமை சீரடைந்து உள்ளது. பொதுமக்கள் யாரும் புரளிகளை நம்ப வேண்டாம். இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன’ர் என கூறியுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் இந்த ஆண்டில் ஸ்ரீராமநவமி, ஹனுமன் ஜெயந்தி போன்ற விழா காலங்களில் முஸ்லிம்கள் ஹிந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். டெல்லியின் ஜகாங்கீர் புரி, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹிந்து பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு, பெட்ரோல் குண்டு, கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன என்பது நினைவு கூரத்தக்கது.