உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தின் ஹிந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருந்தனர். பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதனை உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. மேலும், சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.