தி.மு.கவின் சமூக நீதி

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கணக்கெடுப்பில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 24 மாவட்டங்களில், 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சித் தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற அனுமதிமறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 22 ஊராட்சிகளில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகின்றனர். 42 ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர்களின் பெயர் பலகைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு அமர்ந்து கொண்டு உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது, பிஹாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர், தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்கிறார்கள் என்ற மாயையில் இருக்கின்றனர். தி.மு.க ஆட்சியில் சமூகநீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீபகால நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன” என வேதனை தெரிவித்துள்ளார்.