ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மஹால் கார்யாலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், மொஹிதே வாடே ஷாகா கார்யகர்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதேபோல வட தமிழகம், தென் தமிழகம் உட்பட தேசத்தில் உள்ள அனைத்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களிலும் அதன் துணை அமைப்புகளின் அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.